குளிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி - கோவை அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…!

x

குளிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி - கோவை அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…!


கோவை துடியலூர் அருகே, குளியல் அறையில் வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கியதில், தாய் மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். துடியலூர் அருகே விஸ்வநாதபுரம் மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்த தாய் கார்த்திகா மற்றும் அவரது மகள் 18 வயதான அர்ச்சனா ஆகியோர் வசித்து வந்தனர். இளம்பெண் அர்ச்சனா குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது வாட்டர் ஹீட்டரில் இருந்து வெளியேறிய மின்சாரம், அங்கிருந்த தண்ணீரிலும் பரவி இருந்ததாக கூறப்படுகிறது. இதில், மின்சாரம் தாக்கி அர்ச்சனா கூச்சலிடவே, சமையல் அறையில் இருந்து அவரது தாய் கார்த்திகா, மகளைக் காப்பாற்ற ஓடி வந்துள்ளார். ஆனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கூச்சல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர். தகவலின் பேரில் வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்