வெள்ள சேதங்களை குறித்து... அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு

x

சேலம் மாவட்டத்தில் வெள்ள சேதங்கள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதியில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோரம் வசித்த மக்கள் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை நேரில் சந்தித்த நகராட்சி அமைச்சர் கே என் நேரு, ஆறுதல் தெரிவித்தார். ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாய நிலங்களில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்