பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் | Anbil Mahesh | TNSchool

x

பிள்ளைகளை எங்களை நம்பி அரசுப்பள்ளிக்கு அனுப்பிவையுங்கள் எனக்கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஸ் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் பேரவை சார்பில் பள்ளியில் படிக்கும் சுற்றுப்புற மாணவர்களுக்காக ரூ.13 லட்சம் மதிப்பிலான பேருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், அன்பில் மகேஸ் மற்றும் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், பிள்ளைகளை எங்களை நம்பி அரசுப் பள்ளிக்கு அனுப்பி வையுங்கன் என்று பெற்றோரை அவர் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்