அமைச்சர் அனா உதயநிதி ஸ்டாலின்.. புதிதாக உருவாக்கப்பட்ட அறையில் வசதிகள் என்ன?

x

சென்னை தலைமைச் செயலகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தனியாக அறை உருவாக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் 2-வது தளத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தனியறை உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஆட்சி மாற்றத்தின் போது, குறிப்பிட்ட அமைச்சகத்தின் அறையில் புதிதாக வரும் அமைச்சர்கள் அமர்வார்கள். இப்போது உதயநிதிக்கு புதிதாக தனியறை உருவாக்கப்பட்டுள்ளது. சட்டத்துறை செயலாளர் கோபி குமார் அறைக்கு அருகே, ஆயிரம் சதுர அடியில் அந்த அமைச்சர் அறை உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்முக உதவியாளருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. தெற்கு வாசல் கொண்ட அறையில், சிறிய கூட்ட அரங்கு, ஓய்வறை, அமைச்சரை சந்திக்க வரும் விருந்தினருக்கு, சிற்றுண்டி தயர் செய்ய சிறிய சமையல் அறை, கழிப்பறை வசதிகள் உள்ளன. அனைத்து அறைகளிலும் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. அமைச்சர் அறையில் இரண்டு ஏசிகள் பொருத்தப்பட்டுள்ளன. அறையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் ஆகியவை இடம்பெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்