அதிக சத்தம்...வேலூரில் லேசான பூகம்பம் - அச்சத்தில் உறைந்த மக்கள்

x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பேர்ணாம்பட்டு பகுதியில் அதிக சத்தத்துடன் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. தரைக்காடு பகுதியில் அதிக சத்தத்துடன் லேசான நில அதிர்வு உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லேசான நில அதிர்வால் எந்தவித பாதிப்புகளும் பொருட் சேதங்களும் ஏற்படாத நிலையில் ஒரு சில வீடுகள் லேசான விரிசல் விடப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்