மணிப்பூர் சங்காய் திருவிழா... காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு

x

நம்முடைய இயற்கை, விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய திருவிழாக்களை கொண்டாடுவதன் மூலம் இயற்கை நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறி விடுவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் சங்காய் திருவிழாவில் பிரதமர் மோடி, காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர், இது மாநிலத்தின் மிக பிரபலமான திருவிழா என்றும், இதன் மூலம் மணிப்பூரை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்றலாம் என்றும் தெரிவித்தார்.

இந்த விழா மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆற்றல் மிக்க வழியாக இருக்கும் என்பதில் தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்