நண்பனின் நரம்புகளை கத்தியால் கிழித்த நபர் - கொடைக்கானலில் பரபரப்பு

x

கொடைக்கானல் உகார்த்தே நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரன் என்பவரிடம் 500 ரூபாய் கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நண்பர்களான இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, பாஸ்கரனிடம் கொடுத்த 500 ரூபாய் கடனை திருப்பிக் கேட்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தினகரன், பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியைக் கொண்டு, பாஸ்கரனின் கை மணிக்கட்டில் கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் கையின் நரம்புகள் பாதிப்படைந்ததால், தேனி அரசு மருத்துவமனையில் பாஸ்கரன் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில், தினகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்