நேரில் மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்.. வழக்கில் திடீர் திருப்பம்

x

மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகரான ஸ்ரீநாத் பாசி, ஒரு நேர்காணலில் பெண் செய்தியாளரிடம் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த செய்தியாளர், கொச்சி மரடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டு, மூன்று மணிநேர விசாரணைக்கு பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தன்னை நேரில் சந்தித்து ஸ்ரீநாத் பாசி மன்னிப்பு கோரியதால், வழக்கை திரும்ப பெறுவதாக பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

காவல்துறையில் அளித்த புகாரையும் தொடர விரும்பவில்லை என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யகோரி ஸ்ரீநாத் பாசி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்