ஆயுதங்களுடன் கரை ஒதுங்கிய படகு பீதியில் மகாராஷ்டிரா..!

x

ஆயுதங்களுடன் கரை ஒதுங்கிய படகு பீதியில் மகாராஷ்டிரா..!


கடந்த 2008 ஆம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்கு பயணித்த பயங்கரவாதிகள், நடத்திய கொடூர தாக்குதலில் 166 அப்பாவி உயிர்களை பலி கொடுக்க நேரிட்டது. இந்த சம்பவம் ஏற்படுத்திவிட்டு சென்ற ரணமே இன்னும் ஆறாத நிலையில், தற்போது மும்பை அருகே 3 AK 47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்களுடன் ராய்கட் கடற்கரையில் படகு ஒன்று கரை ஒதுங்கி இருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இந்த படகு ஆஸ்திரேலியா தம்பதியருடையது என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இந்த படகின் மூலம் மஸ்கடில் இருந்து ஐரோப்பாவிற்கு பயணித்த போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக படகு நடுக்கடலில் தத்தளித்தது. இதையடுத்து அவர்கள் காப்பாற்றப்பட்ட பிறகு படகு கடலிலே கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அந்த படகு கரை ஒதுங்கியுள்ள நிலையில், படகில் எப்படி ஆயுதங்கள் வந்தன? என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்