ஓடும் பேருந்தில் 40சவரன் நகை அபேஸ் - அதிர்ச்சியில் பெண் பயணி

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, ஓடும் பேருந்தில் 40 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மானாமதுரையை சேர்ந்த மிர்காஸ் என்ற பெண், திருப்புவனத்தில் இருந்து மானாமதுரைக்கு தனியார் பேருந்தில் சென்றார்.

அப்போது, தனது பையில் வைத்திருந்த 40 சவரன் நகை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து வந்த மானாமதுரை போலீசார், பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர், மானாமதுரை காவல் நிலையத்துக்கு பயணிகளுடன் பேருந்தை எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்