வடை கடைக்குள் புகுந்த டூவீலர் - கொதிக்கும் எண்ணெய் கொட்டி இருவர் பலத்த காயம் - மதுரையில் அதிர்ச்சி

x

மதுரையில், அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம், சாலையோர தள்ளுவண்டி கடை மீது மோதியது. இதில், கொதிக்கும் எண்ணெய் கொட்டியதில், இருவர் படுகாயம் அடைந்தனர். அழகப்பன் நகரில், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், சாலையோர கடை மீது மோதியது. இதில், அந்தக் கடையில், வடை போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த சூடான எண்ணெய் தெரித்தது. இந்த சம்பவத்தில் கடை உரிமையாளர், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற பழங்காநத்தம் போலீசார், இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்லும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்