ஆவின் பால் குளிரூட்டும் நிலையம்; மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ஆவின் பால் குளிரூட்டும் நிலையம்; மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
x

திருவண்ணாமலையில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர்நிலையில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதா என்ற ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏழுமலை அளித்த புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் விரைவாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஆக்கிமிரப்பு உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பு இல்லை என்றால் கட்டுமான பணியை ஆவின் நிறுவனம் தொடரலாம் என்றும் தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்