காதலி இறந்ததால் காதலன் தற்கொலை.. Whatsapp ஸ்டேட்டசால் வந்த பிரச்சனை.. மகனை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் பெற்றோர்

x

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே, இளைஞர் வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாச்சலம் அருகே தொரவலூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஓவியா உட்பட 3 பேர், இரு தினங்களுக்கு முன்பு, கோ.மங்கலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பாலாஜி என்பவர், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, காதலித்து வந்த ஓவியா இறந்துவிட்டதால் தான், பாலாஜி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த விவகாரம் உயிரிழந்த ஓவியாவின் உறவினர்களுக்கு தெரியவர, பாலாஜியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்