தூக்குபோட்டு இறந்த காதல் ஜோடி - திருமணம் ஆன பின் நடந்த சோகம்

x

தூத்துக்குடி அருகே, காதல் திருமணம் செய்த இரண்டே மாதத்தில், தம்பதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியை சேர்ந்த முனியசாமி மற்றும் கீதா செல்வி ஆகிய இருவரும், நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் தகராறு ஏற்படவே, விரக்தியில் இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டனர். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்