சிகிச்சைக்கு பணம் இன்றி தவிக்கும் பழம்பெரும் நடிகை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆறுதல்

x

உடல்நலம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி வரும் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த 1970-களில் தென்னிந்தியாவில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கியவர் ஜெயக்குமாரி...

திருமணத்திற்கு பின் தனது 25 ஆவது வயதில் படம் நடிப்பதை நிறுத்திய அவர், தனது கணவர் தயாரித்த படம் தோல்வியடைந்து நட்டம் ஏற்பட்டதால் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார்.

கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனையில் ஜெயக்குமாரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தனக்கு உதவி செய்யும்படி ஜெயக்குமாரி கோரிக்கை விடுத்த நிலையில், வீடு மற்றும் உதவித்தொகை வழங்குவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்