திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் மர்ம சாவு

x

திருச்சி அருகே திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டம், அலந்தூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சுரேஷ்-தனலட்சுமி.

இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருடன் தனலட்சுமி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், தனலட்சுமி தனது கணவர் சுரேஷை பிரிந்து அந்நபருடன் 3 ஆண்டுகளாக வாழ்ந்ததாக தெரிகிறது. இதனிடையே, மீண்டும் இணைந்து வாழ்வதற்காக சுரேஷ் அழைத்ததன் பேரில் தனலட்சுமி சுரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, தனலட்சுமியின் தாயார், சுரேஷின் தாயார் மற்றும் சுரேஷ் ஆகியோர் தனலட்சிமியுடன் பேசிக் கொண்டிருந்த போது, வாக்குவாதம் ஏற்பட்டதால் தனலட்சுமி தனது தாயாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சுரேஷ், அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, வீட்டிலிருந்த தனலட்சுமி உடலில் காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து போலீசார், அவரது சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்