28 ஆண்டுகளுக்கு முன் மாயமான சிலை - மீண்டும் கிடைத்ததால் கிராமத்தில் கோலாகலம்

x

குளித்தலை அருகே 28 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகி மீண்டும் கிடைத்துள்ள அத்திமரத்திலான சாமி சிற்பத்துக்கு கிராம மக்கள் பூஜை செய்தனர்.

குளித்தலை அருகே, மாலைமேடு பகுதியில் உள்ள மாலையம்மன் கோவிலில் இருந்த பழமை வாய்ந்த அத்திமரத்தில் செதுக்கப்பட்ட சாமி சிற்பம், கடந்த 1994-ஆம் ஆண்டு மாயமானது.

அந்த சிலை, கடந்த 29-ஆம் தேதி மீண்டும் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வைத்து பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்