பணத்தை எண்ணி பார்க்காமல் வாங்குவோருக்கு இச்சம்பவம் ஒரு பாடம்.. நூதன மோசடி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, கருப்பு பணத்தை மாற்றித் தருவதாகக் கூறி, நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
x

கோவை காந்திபுரம் ராம்நகரைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரிடம், திருவேங்கடசாமி என்பவர், தனக்கு தெரிந்த கேரளாவை சேர்ந்த 2 பேர் கருப்பு பணம் வைத்துள்ளதாகவும், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, 2 லட்சம் ரூபாய் கருப்பு பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய பிரவீன்குமாரும், திருவேங்கடசாமியுடன், ஆனைமலை பகுதிக்கு சென்று, அந்த நபர்களிடம் கருப்பு பணத்தை வாங்கியுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பெற்ற மர்மநபர்கள், அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர். பின்னர் திருவேங்கடசாமி அந்த பிளாஸ்டிக் கவரில் உள்ள பணத்தைப் பிரித்து பார்த்தபோது, நான்கு கட்டுகளில் மேல் மற்றும் கீழ் பகுதியில் மட்டும் 500 ரூபாய் தாள் வைக்கப்பட்டிருந்த நிலையில், மற்ற அனைத்தும் வெள்ளை காகிதங்களாக இருந்தன. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்