"என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்" பார்வை இழந்த மூதாட்டி ஆட்சியரிடம் மனு.. நெஞ்சை உறைய வைத்த சம்பவம்

x

ஆரணியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, கருணை கொலை செய்ய மனு அளித்த சம்பவம் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த மூதாட்டி சின்னகுழந்தை, அவரது மகன் நடராஜன் என்பவரின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

புற்றுநோயால் மூதாட்டி கண் பார்வை இழந்த நிலையில், அவரது பேரனான கார்த்தி என்பவர், மூதாட்டியின் பெயரில் இருந்த வீட்டை தன் பெயருக்கு மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆரணி கோட்டாச்சியரிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் தன்னை கருணைக் கொலை செய்யுமாறு, மாவட்ட ஆட்சியருக்கு மூதாட்டி சின்னகுழந்தை மனு அளித்துள்ளார்.

பேரனிடமிருந்து சொத்தை மீட்க முடியாத நிலையில், கருணைக்கொலை செய்ய மூதாட்டி மனு அளித்தது நெஞ்சை உறைய வைத்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்