கணவனிடம் இருந்து வந்த திடீர் போன்... அதிர்ச்சியில் உறைந்த மனைவி.. சினிமாவை மிஞ்சும் ஸ்ரீவைகுண்டம் சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, ஆசிரியையின் கணவர் கடத்திய 3 பேரை, போலீசார் மீட்டனர்.
x

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியை சேர்ந்த குருஸ் அலெக்சாண்டர். இவரது மனைவி பிரான்சிஸ் விண்ணரசி. இவர்களுக்கு சுமித் என்ற இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளது. வீட்டில் தனது குழந்தையுடன் தனியாக இருந்த குருஸ் அலெக்சாண்டரை கும்பல் ஒன்று கடத்திச் சென்றது. பின்னர் அந்தக் கும்பல் கூறிய படி, தனது மனைவிக்கு போன் செய்த அலெக்ஸாண்டர், தான் கடத்தப்பட்டதாகவும், உடனடியாக 25 லட்சம் ரூபாய் கொண்டு வந்தால்தான் விடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விண்ணரசி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், நாசரத் அருகே நின்றுகொண்டிருந்த அலெக்ஸாண்டரின் இரண்டரை வயது குழந்தையை மீட்டனர். பின்னர் விருதுநகர் மாவட்டம், சூலக்கரையில் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அலெக்ஸாண்டரை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக கல்யாண் குமார், அமகது அக்ரம் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விசாரணையில், 5 பேரிடம் 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி திருப்பித் தராததால், அலெக்ஸாண்டர் கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்