பிரபல ரவுடி காரில் கடத்தல்..! - மேலாளருடன் சிக்கிய நகைக்கடை அதிபர்... சேலத்தை அதிர வைத்த சம்பவம்

x

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ரவுடி பூபதி என்பவர், அவரது நண்பர் பிரவீன்குமாருடன் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, மர்மகும்பல் ஒன்று அவர்களை தாக்கி, காரில் கடத்திச் சென்றது. அந்த கும்பலிடம் இருந்து பிரவீன் தப்பிய நிலையில், ரவுடி பூபதியின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் பின் தொடர்ந்து சென்றனர். போலீசார் பின்தொடர்வதை அறிந்த மர்மகும்பல், திருவண்ணாமலையில் ரவுடி பூபதியை காரிலிருந்து இறக்கி விட்டு தப்பிச் சென்றது. பின்னர், பூபதியை மீட்ட போலீசார், காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரத்திற்கு சொந்தமான 12 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் வீராணத்தில் உள்ளது. அந்த நிலத்தை விற்று தருவதாகக் கூறி, அசல் பத்திரத்தை பெற்ற ரவுடி பூபதி, நிலத்தை விற்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏகாம்பரம், கூலிப்படையை ஏவி பூபதியை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரம், கடை மேலாளர் பாபு ஆகிய இருவரை கைது செய்த போலீசார், கூலிப்படையினரை தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்