கல்யாணத்துக்காக சிறப்பு ரயில் புக்கிங்... தப்பு தாளத்துடன் ரயில் நிலையத்தில் செம கொண்டாட்டம்

x

கரூர் ரயில் நிலையத்துக்கு வந்த திருமண கோஷ்டியினர், நடைமேடையில் ஆட்டம், பாட்டு, கச்சேரி என குத்தாட்டம் போட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருவையாற்றில் நடைபெற உள்ள திருமண விழாவில் பங்கேற்க திருமண கோஷ்டினருக்கு என்று தனியாக ஒரு சிறப்பு ரயில் ஒப்பந்த அடிப்படையில் புக் செய்யப்பட்டது. இந்த ரயில் கரூர் ரயில் நிலையத்தில் வந்தடைந்த போது, அங்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள், கரகாட்டம், தப்பாட்டம் கலைஞர்களுடன், இசை வாத்தியம் முழங்க நடனம் ஆடினர். அவர்களுடன் மணமகள், மணமகன் மற்றும் திருமண வீட்டினர் ஆட்டம் பாட்டம் என குத்தாட்டம் போட்டது அனைவரைய்யும் கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்