சர்ச்சுக்குள் நகைகளை லவட்டிய 'திருட்டு பூனை'.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை... 'கள்ளக்காதல் ஜோடியும்; கதறவிட்ட போலீசும்' -

x

கன்னியாகுமரியில், தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் மற்றும் அவரது கள்ளக்காதலியை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 45 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். குளச்சல் அருகே புனித காணிக்கை அன்னை ஆலயத்தில், மாதா சொரூபத்தில் இருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போனது. இந்த சம்பவம் தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, ஜன்னல் வழியாக நுழைந்த பெண், கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதுகுறித்து விசாரித்தபோது, ஏற்கனவே பல்வேறு திருட்டு சம்பவங்களில் தேடப்பட்டு வந்த, கள்ளக்காதல் ஜோடி சாபுமோன், நூர்ஜகான் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்