வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த முதியவருக்கு நேர்ந்த துயரம் - யாரும் பார்க்காததால் துடிதுடித்து பலி

x

திருவண்ண ாமலை மாவட்டத்தில் 70 வயது முதியவர் குடிநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 70 வயது முதியவர் முருகேசன்.

இவருடைய மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவரின் 2 பிள்ளைகளும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியாக வசித்து வந்த முதியவர், வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த போது அருகில் உள்ள குடிநீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார்.

அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாத நிலையில், முதியவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்