அடிக்கடி விபத்தாகும் கல்லட்டி மலைபாதை..50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்..விபத்தில் நடந்த அதிர்ச்சி.!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கல்லட்டி மலை பாதையில், 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.
x

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கல்லட்டி மலை பாதையில், 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்தார். சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 18 பேர், வேனில் உதகைக்கு சென்றனர். மலைப்பாதை வழியாக சென்ற போது, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், முத்துமாரி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 18 பேர், உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்