கள்ளக்குறிச்சி வன்முறை...இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி பள்ளியில் காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவத்தில் கைதான இளைஞருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணியாமூர் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. அதில், போலீசாரை தாக்கியதுடன், போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஆகாஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜாமீன் கேட்டு ஆகாஷ் தாக்கல் செய்த மனுவில், கலவரம் நடந்த பள்ளிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டதாரியான தனது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, ஆகாஷூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Next Story