கள்ளக்குறிச்சி கலவரம் -நால்வர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

x

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர வழக்கில் கைதானவர்களில் மேலும் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

மாணவி உயிரிழப்புக்கு நியாயம் கோரி தனியார் பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்தது.

இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் தொட்டியம் கிராமத்தை சேர்ந்த மணி, லகங்காத்தன் கிராமத்தை சேர்ந்த சரண்ராஜ், வி.மாமந்தூர் கிராமத்தை சேர்ந்த லட்சாதிபதி, பெரியசிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த சர்புதீன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யும்படி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவாத் உத்தரவிட்டார்.

இதுவரையில் கலவர வழக்கில் கைதானவர்களில் 8 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்