பேருந்து கிடைக்காத அவலம்... ஜன்னல் வழியாக அடித்து பிடித்து ஏறிய பயணிகள் - கோயம்பேட்டில் பரபரப்பு

பேருந்து கிடைக்காத அவலம்... ஜன்னல் வழியாக அடித்து பிடித்து ஏறிய பயணிகள் - கோயம்பேட்டில் பரபரப்பு
x

சென்னை கோயம்பேட்டில் இருந்து இரவு நேரத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.முகூர்த்தை தினத்தை முன்னிட்டு திருமணங்கள், திருவிழாக்கள், சொந்த நிகழ்வுகளுக்காக தென்மாவட்டங்களுக்கு செல்வதற்காக ஏராளமானோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். ஆனால், இரவு 12 மணிக்கு மேல் திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு காலை 5 மணிக்குத்தான் அடுத்த பேருந்து வரும் என நடத்துனர்கள் தெரிவித்த‌தால், பயணிகள் நீண்ட நேரம் காத்துக்கிடந்தனர். பேருந்து நிலையத்திற்கு வந்த ஓரிரு பேருந்துகளில் முண்டியடித்துக்கொண்டு படியிலும், ஜன்னல் வழியாகவும் ஏறியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து கிடைக்காமல் சிலர் காத்திருந்து அதிகாலையில் புறப்பட்டு சென்றனர். இரவு நேரங்களில் பேருந்துகளை தொடர்ந்து இயக்க வேண்டும் என்றும், திருவிழாக்கள், முகூர்த்த நாள்களில் முன்கூட்டியே திட்டமிட்டு, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேருந்து கிடைக்காத அவலம்... ஜன்னல் வழியாக அடித்து பிடித்து ஏறிய பயணிகள் - கோயம்பேட்டில் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்