போராட்டத்தில் வெடித்த வன்முறை - ஒரே வாரத்தில் படுகொலையான 72 உயிர்கள்

x

ஈரானில் நடத்தப்படும் போராட்டங்களில் வெடித்த வன்முறையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 72 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இளம்பெண் மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி கைது செய்யப்பட்டு காவலில் இருந்த போது மரணம் அடைந்தார். அவரது இறப்புக்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போராட்டக்காரர்கள் மீதான வன்முறையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மேற்கு குர்திஷ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 56 பேர் உட்பட 72 பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்