குறுக்கிட்ட மழை - தொடரை கைப்பற்றியது நியூசி. | India | new zealand

x

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டதால், நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது..

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 2வது ஆட்டம் மழையால் ரத்தானது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில்(Christchurch) இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய இந்திய அணி 47 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் 219 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் 3வது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது. இதனால் ஒன்றுக்கு பூஜ்ஜியம்(1-0) என்ற கணக்கில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.


Next Story

மேலும் செய்திகள்