"அறிவியல் & தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை புரிய வேண்டும்" - தலைமை இயக்குனர் டாக்டர் கலைச்செல்வி

x

தாய்நாட்டிற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்ற வைராக்கியம் இருந்தாலே எந்த உயரத்தையும் எளிதாக அடைய முடியும் என்று இந்திய அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் டாக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த டாக்டர் என்.கலைச்செல்வி, தற்போது இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், காரைக்குடியில் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை புரிய வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்