அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்.. பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையம்.. பொதுமக்கள் விடுத்த கோரிக்கை

x

நெல்லை மாவட்டம், வடக்கன்குளத்தில் செயல்பாடற்ற புறக்காவல் நிலையத்தால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. வடக்கன்குளத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்னதாக பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த 6 மாதங்களாக புறக்காவல் நிலையம் செயல்படாமல் பூட்டப்பட்ட நிலையில் உள்ளதால் வடக்கன்குளம் பகுதியில் மீண்டும் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. புறக்காவல் நிலையத்தை திறந்து மீண்டும் செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்