சட்டவிரோதமாக செயல்படும் பார்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

x

மொட்டை மாடிகளில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலசந்தர் என்பவர் தமிழகத்தில் அனுமதியில்லாத பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறி அபராதம் விதிக்கப் போவதாக நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து, மனுவை திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்