"16லட்சம் கொடுத்தால் 22 லட்சம்.."ஆசை வார்த்தையில் மயங்கிய பெண் எஸ்கேப் ஆன பலே கில்லாடி

x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் பணமோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த மீனா என்பவருக்கு, தேனி மாவட்டம் மாளிகைப்பாறையில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்ற போது செல்வகிருஷ்ணன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்த நிலையில், 16 லட்சம் கொடுத்தால் 22 லட்சம் தருவதாக செல்வ கிருஷ்ணன் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி, 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த மீனாவிடம், செல்வ கிருஷ்ணனின் நண்பர் பால் துறை பணத்தைப் பெற்று சென்றுள்ளார். இதையடுத்து, செல்வ கிருஷ்ணனை தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிவகிரிக்கு சென்று செல்வ கிருஷ்ணனை கைது செய்து 7 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தலைமறைவான பால் துறையை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்