மனைவி, பிள்ளைகள் தூங்கும் அறையை பூட்டி தீ வைத்த கணவன் - கடைசியில் நடந்த டுவிஸ்ட்!

x

கேரள மாநிலம் வைக்கம் பகுதியை சேர்ந்த ராஜீவ் வழக்கம் போல் மதுபோதையில் சண்டை போட்டுள்ளார்.

அப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

இதனை பார்த்த பக்கத்து வீட்டினர் ராஜீவின் மனைவி மற்றும் குழந்தைகளை தங்களது வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இரவு வீட்டிற்கு வந்த ராஜீவ் வழக்கமாக தனது குடும்பத்தினர் தூங்கும் அறையை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு தீ வைத்துள்ளார்.

பின்னர் மற்றொரு அறையில் அவர் படுத்து கிடந்துள்ளார்.

வீட்டிலிருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னலை உடைத்து ராஜீவை காப்பாற்றியுள்ளனர்.

தீயில் வீடு முழுவதும் எரிந்து சாம்பலான நிலையில், பக்கத்து வீட்டில் தங்கியதால் ராஜீவின் மனைவி உள்ளிட்ட 3 பேர் காப்பாற்றப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்