கோயிலுக்கு செல்லும்போது நடந்த கோர விபத்து.. டெம்போ நசுங்கி 8மாத கைக்குழந்தை பலி

x

கோயிலுக்கு செல்லும்போது நடந்த கோர விபத்து.

டெம்போ நசுங்கி 8மாத கைக்குழந்தை பலி.

மருத்துவமனை செல்லும் வழியில் இன்னொரு அதிர்ச்சி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லாரியும், மினிடெம்போ வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் 8 மாத குழந்தை உட்பட 2 பேர் பலியாகியுள்ளனர். தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த 19- பேர், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு மினிடெம்போ வாகனத்தில் சென்றுள்ளனர். கோவில்பட்டி அருகே சிப்பிபாறை பகுதியில் சென்றபோது, சரக்கு வாகனமும் லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8- மாத ஆண்குழந்தை கபிலேஸ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கிருஷ்ணலீலாவதி என்பவர் உயிரிழந்தார். விபத்து குறித்து திருவேங்கடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்