மயிலாடுதுறை - பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை - குன்றத்தூர் தாலுகா, செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

x

கனமழை எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெறுவதால், மாங்காடு உள்பட குன்றத்தூர் தாலுகா பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.

மழை நீர் தேங்கி இருப்பதால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக, அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நன்மங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளி, நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி, வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த பள்ளிகளில் தூய்மைப் பணி நடைபெற இருப்பதால், இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்