அவலநிலையில் அரசு மருத்துவமனை - வீசும் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி - வெளியான வைரல் வீடியோ

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் துறுநாற்றம் வீசும் கழிப்பறைகளால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மானாமதுரை அரசு மருத்துவமனையின் கழிவறைகள் சரிவர பராமரிக்கப்படாததால் பாசம் படிந்து மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது.

இதுகுறித்து நோயாளிகள் பலமுறை கூறியும் கழிப்பறை சுத்தம் செய்யப்படாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த கழிவறையை நோயாளி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இந்நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்