முதல்வர் ரங்கசாமிக்கு ராக்கி கட்டிய ஆளுநர் தமிழிசை...

x

முதல்வர் ரங்கசாமிக்கு ராக்கி கட்டிய ஆளுநர் தமிழிசை

"ஒவ்வொரு குடும்பமும் முக்கியஸ்தர்கள்"

வீடுகளில் தேசிய கொடி ஏற்றவைத்ததன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தினரையும் பிரதமர் மோடி முக்கியஸ்தர்கள் ஆக்கிவிட்டதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் கோயிலுக்கு வருகை தந்தார். இதனைத்தொடர்ந்து இருவரும் இணைந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது தமிழிசை சௌந்தரராஜன், ராக்‌ஷா பந்தனையொட்டி, ரங்கசாமிக்கு ராக்கி கயிறு கட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தேசிய கொடி ஏற்றவைத்ததன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தினரையும் பிரதமர் மோடி முக்கியஸ்தர்கள் ஆக்கிவிட்டதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்