குளமாக மாறிய அரசுப்பள்ளி வகுப்பறைகள்... மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அவதி

x

கிருஷ்ணகிரி மாவட்டம் கிரியானப்பள்ளியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறையின் மேற்கூரை சேதமடைந்த நிலையில், மழை நீர் ஒழுகுவதால், மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். கனமழை காரணமாக, மேற்கூரையில் மழை நீர் ஒழுகி, வகுப்பறை முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கடும் அவதி அடைந்தனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்