கேஸ் குடோன் தீ விபத்து.. பலி 3ஆக உயர்வு | Gas Cylinder

x

காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் கேஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

தேவ ரியம்பாக்கம் கிராமத்தில் ஏற்பட்ட கேஸ் குடோன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே ஜீவானந்தத்தின் மகள் சந்தியா மற்றும் பணியாளர் அமோத்குமார் உயிரிழந்த நிலையில், தற்பொழுது

உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 உயர்ந்துள்ளது. பாரத் கேஸ் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், கேஸ் குடோனில் இருந்த அனைத்து சிலிண்டர்களும் தரம் பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, கேஸ் குடோனுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்