கஞ்சா போதையில் பேயாட்டம் - பட்டாக் கத்தியால் சரமாரி தாக்குதல் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

கஞ்சா போதையில் இருந்த கும்பல், கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குளப்பன் தெருவில் ஒரு கடைக்குள் புகுந்த 4 இளைஞர்கள் பட்டாக் கத்தியைக் காட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும், கஞ்சா போதையில் இருந்த அந்த நால்வரும், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் நள்ளிரவில் பணி முடிந்து வருபவர்களை வழி மறித்து தாக்கி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர். இளைஞர்களின் இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். தேடுதல் வேட்டையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட நரேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பட்டாக்கத்தி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்