வெறும் ரூ.500க்காக இளைஞரின் குடும்பத்தையே வெட்டிய கொடூர நண்பர்கள் - திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி

x

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கஞ்சா போதையில் நண்பரையே வெட்ட முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதிபெரமனூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் அஜித் ஆகியோருக்கும் இடையே, 500 ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது.

இந்நிலையில், கஞ்சா போதையில், நண்பர்களுடன் அருண்குமாரின் வீட்டிற்கு சென்ற ஆகாஷ் மற்றும் அஜித் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், கைகலப்பாக மாற ஆகாஷ், அஜித் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியால், அருண்குமார், அவரது மனைவி காவியா, மற்றும் சகோதரி ஐஸ்வர்யாவை தாக்கிவிட்டு தப்பியோடினர்.

இதில் படுகாயம் அடைந்த மூவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வழக்குபதிந்த போலீசார், ஆகாஷ் மற்றும் அஜித் ஆகியோரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்