மனைவியுடன் கட்டாய பாலியல் உறவு குற்றமா? - செப்.16ல் விசாரணை

x

மனைவியுடன் கட்டாய பாலியல் உறவு வைப்பதை குற்றமாக்க கோரி தாக்கல் செய்த ரிட் மனுக்களை வரும் 16ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. மனைவியுடன் கணவர் கட்டாய பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கு எதிரான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் தனித்தனி தீர்ப்பு வழங்கினர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட ரிட் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்புடைய அனைத்து மனுக்களும் வரும் 16-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தது.


Next Story

மேலும் செய்திகள்