பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு | வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

x

பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, கோபிசெட்டிபாளையம் அருகே அரசூர், கணேசபுரம் பகுதியில் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாக்கினாங்கோம்பை பகுதியில் விவசாய நிலங்களிலும் வெள்ளம் புகுந்ததால், நடவு செய்யப்பட்டு ஒரு மாதமே ஆன வாழைக்கன்றுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசூர், மாக்கினாங்கோப்பை பகுதிகளில் செங்கல் உற்பத்தி தொழிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்