வயலில் ராம்சரண் முகம்.. 260 கி.மீ. நடந்தே சென்று சர்ப்ரைஸ் தந்த ரசிகர் - நெகிழ்ந்துபோன ராம்சரண்

x

வயலில் ராம்சரணின் முகம் தெரியும்படி விவசாயி நாற்று நட்ட வீடியோ ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் கட்வால் அருகே ஜெய்ராஜ் என்ற ரசிகர், தனது நிலத்தில் நெல் நாற்றுகளால் ராம்சரணின் முகத்தை வடிவமைத்ததோடு, சுமார் 260 கிலோ மீட்டர் நடந்து சென்று அவரை நேரில் சந்தித்தார். அப்போது தனது நிலத்தில் விளைந்த 2 அரிசி மூட்டைகளை ராம்சரணுக்கு அன்பளிப்பாக வழங்கி ஜெய்ராஜ் மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்