பிரபல கிரிக்கெட் அம்பயர் அகால மரணம்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நடுவர் ரூடி கோயர்ட்சென் கார் விபத்தில் உயிரிழந்தார்.
கேப்டவுனில் குடும்பத்துடன் வசித்து வந்த ரூடி கோயர்ட்சென், நண்பர்களுடன் ஜாலியாக கோல்ப் விளையாட சென்று விட்டு, நேற்று காலை காரில் திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், இவரது இறப்பிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், ரூடி கோயர்ட்செனுடன் தனக்கு நல்ல உறவு இருந்ததாகவும், களத்தில் தான் அவசரகதியில் ஷாட்டுகள் அடிக்கும் போதெல்லாம் சத்தம் போடுவார் என்றும் சேவாக் தெரிவித்துள்ளார்.
Next Story