மருத்துவமனையில் தெரிய வந்த சோகம் - ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் தற்கொலை

x

கோபிசெட்டிபாளையம் அருகே ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்வர மூர்த்தி-ரஞ்சிதம் தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லாமல் போனதால், மருத்துவர்களிடம் சோதித்ததில் குழந்தை சற்று மூளை வளர்ச்சி இல்லாமல் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனிடையே, குழந்தையின் தாய் ரஞ்சிதம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குருமந்தூர் கீழ்பவானி வாய்க்காலில் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்