டெல்லியில் ஈபிஎஸ்... வாரணாசியில் ஓபிஎஸ்

x

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற எடப்பாடி பழனிசாமியை, அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து கோஷங்களுடன் வழியனுப்பி வைத்தனர்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த தகவலை தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் வாரணாசி சென்றார். ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் மதுரை, ராமேஸ்வரம் சென்று, அங்குள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், மதுரையில் இருந்து சென்னை வந்த ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர், விமான நிலையத்தில் தங்கி இருந்தனர். பின்னர் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து வாரணாசி புறப்பட்டு சென்றனர்.

அங்கு காசி விஸ்வநாதா் கோயில் உட்பட பல்வேறு கோயில்களுக்கு சென்று விட்டு, சென்னை திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்