கணவருடன் சண்டையால் ஆத்திரம் - கேஸ் சிலிண்டரை திறந்து வைத்த மனைவி

x

நெல்லை மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக தனது இரண்டு மகன்களுடன் சமையல் கேஸை திறந்து வைத்து தாய் தற்கொலைக்கு செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

களக்காடு அருகே உள்ள கீழத்தெருவை சேர்ந்தவர் பாலரேவதி. இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தனது இரண்டு மகன்களுடன் தனியே வசித்து வந்தார். இந்நிலையில், கணவருடன் தொலைபேசியில் பேசும் போது ஏற்பட்ட தகராறால், வீட்டில் கேஸ் சிலிண்டரை திறந்து தனது மகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்